தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரல் 6 முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோடை விடுமுறையை சிறப்பித்து வந்தவர்களுக்கு, பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டை பொறுத்தவரை தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் என மொத்தமாக 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த முடிவுகள் கடந்தாண்டை விட 1.32 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அம்மாநில முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார். இதில் 89.12 சதவீதம் மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிலும் அரசு பள்ளிகளில் 78.93 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டை விட 3.8% தேர்ச்சி விகிதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக 10th , +12 பொதுத்தேர்வு மாணவர்களே.., உங்களுக்காவே வெளியான சூப்பர் அறிவிப்பு!!
கொரோனா கால தடைகளை தாண்டி பெற்ற தேர்ச்சி விகிதத்தை தற்போது பெற முடியவில்லை என கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆய்வு செய்ய குழு அமைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இது போக அடுத்த கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் CBSE பாடத்திட்டம் அமல்படுத்த இருப்பதால் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.