கோலிவுட் வட்டாரங்களில் பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான கயல் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஆனந்தி. இந்த படம் அவரின் சினிமா கேரியரில் திருப்பு முனையாக அமைந்ததால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில் இவர் நடித்த விசாரணை, பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் ஹிட் அடித்தவை. இதனை தொடர்ந்து தற்போது இவர் நடிப்பில் தமிழ்-தெலுங்கில் இராவணக் கூட்டம் என்ற படம் வெளியாக இருக்கிறது. இப்படமும் இவருக்கு வெற்றியை தேடி தருகிறதா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
போடு தகிட தகிட.., இனி இந்த சீரியல் தான் மாஸ்.., அப்போ மத்தவங்களா பொட்டிய கட்ட வேண்டியதுதான்!!
இப்படி தனது கெரியரில் பிசியாக இருந்து வரும் இவர், கடந்த 2021ம் ஆண்டு துணை இயக்குனர் சாக்ரடீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. இந்த நிலையில் அவர்களின் இரண்டாவது ஆண்டு திருமண நாளை கோலகலமாக கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.