அரசு கல்லூரிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் தங்களது சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளது.
சொத்து மதிப்பு
அரசு பணியில் உள்ள ஊழியர்கள் வரம்புக்கு மீறி சொத்துக்களை சேர்ப்பதாக அவ்வப்போது புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் இதை கண்காணிக்க தமிழக அரசு அனைத்து பணியில் உள்ள ஊழியர்களின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் தற்போது அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் ஆகியோர் தங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குனரகம் ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் குட்கா, ஹான்ஸ் மீண்டும் விற்பனை செய்யலாமா?? ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!
மேலும் இந்த விவரங்களை இன்னும் 15 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் எனவும், கருவூலத்துறையில் இதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அந்தந்த கல்லூரி முதல்வர், மண்டல கல்வி இணை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.