தமிழகத்தில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களால் புற்றுநோய் மட்டுமல்லாமல் சுகாதாரத்திற்கும் கேடு விளைவிக்கிறது. இதன் காரணமாக இந்த புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை என தனியார் நிறுவனம் ஓன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “எந்த ஒரு புகையிலை பொருட்கள் தயாரிப்பதாலும் பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடாது. தீங்கு ஏற்படுவதாக நிரூபிக்கப்பட்டால் அந்த பொருளுக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு.” என உத்தரவை பிறப்பித்தனர்.
வாட்ஸ்அப் பயனர்களே ஜாக்கிரதை.., இனி போன் வந்தா எடுக்காதீங்க மக்களே .., வெளியான ஷாக் நியூஸ்!!!
இது தொடர்பாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறுகையில், “அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு உள்ளேயே எந்த ஒரு தொழிலோ அல்லது வர்த்தகமோ செயல்பட வேண்டும்.” என கருத்தை பகிர்ந்துள்ளார்.