தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் சூர்யா. சமீபத்தில் இவர் நடித்த ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன், சூரரைப் போற்று போன்ற திரைப்படங்கள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இவர் நடிப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இது தவிர தனிப்பட்ட வாழ்க்கையிலும் அகரம் பவுண்டேஷன் உள்ளிட்டவற்றையும் நடத்தி வருகிறார். இப்படி எப்போதும் தனது சினிமா, பர்சனல் வாழ்க்கையில் பிஸியாக இருக்கும் இவரை பற்றி பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இவர், நடிகர் சூர்யா சினிமாவில் நடிக்கும் போது ஒரு மாதிரியாகவும், வெளியுலகில் முற்றிலும் மாறுபட்டவராகவும் திகழ்கிறார். இதற்கு காரணம், சூர்யா ஒரு முறை மும்பை விமான நிலையத்தில், ‘எனது மகனையும், மகளையும் புகைப்படம் எடுக்காதீர்கள்’ என கடுமையாக திட்டினார். ஆனால் அதே சூர்யா கீழடிக்கு சென்று தனது குடும்பத்துடன் வித்தியாசமாக போஸ் கொடுத்தார்.
இது தவிர தமிழுக்காக குரல் கொடுத்த இவர் இப்போது தனது கேரியருக்காக தமிழ்நாட்டை மறந்து மும்பையில் பிஸ்னஸ், பாலிவுட் படம் எடுத்துக் கொண்டு அங்கேயே செட்டில் ஆகி விட்டதாக கூறியுள்ளார். இது போன்று அவர் செய்வது அவரின் உண்மை முகத்தை காட்டுவதாக செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.