டாஸ்மாக் கடைகளை ஏப்ரல் 4-ந் தேதி மூட உத்தரவு- கலெக்டர் அறிவிப்பு!!

0
டாஸ்மாக் கடைகளை ஏப்ரல் 4-ந் தேதி மூட உத்தரவு- கலெக்டர் அறிவிப்பு!!
டாஸ்மாக் கடைகளை ஏப்ரல் 4-ந் தேதி மூட உத்தரவு- கலெக்டர் அறிவிப்பு!!

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் அனைத்து டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மகாவீர் ஜெயந்தி:

ஒவ்வொரு ஆண்டும் சமணர்களால் மகாவீரர் ஜெயந்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இந்த வருடமும் வருகிற ஏப்ரல் 4ம் தேதி கொண்டாடபடும் நிலையில் சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது, வருகிற ஏப்ரல் மாதம் 4ம் தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் தனியார் பார்கள் மற்றும் ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் உட்பட அனைத்தும் சரக்கு கடைகளையும் கண்டிப்பாக மூட வேண்டும். மேலும் உத்தரவை மீறி கடைகளில் மதுபானங்களை விற்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். மேலும் இந்த தகவலை கேட்ட மது பிரியர்கள் சற்று சோகத்தில் இருந்து வருகின்றனர்.

1 முதல் 8 வகுப்புக்கு தேர்வு கிடையாது.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here