மத்திய மற்றும் மாநில அரசுகள் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் UP மாநிலத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் அடுத்த வகுப்பிற்கு செல்வதற்கான உத்தரவை கல்வி கவுன்சில் செயலாளர் பிரதாப் சிங் பாகேல் வெளியிட்டுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இது குறித்து அவர் கூறுகையில், 1 முதல் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்கள் தேர்வு இல்லாமல் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான உத்தரவு ஒவ்வொரு ஆண்டும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த உத்தரவு இந்த ஆண்டுக்கு பொருந்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த உத்தரவு அனைத்து கவுன்சில் மற்றும் கவுன்சில் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு பொருத்தும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டு தேர்வு, மதிப்பீட்டின் அடிப்படையில் ரேங்க் கார்டு வழங்கப்படும்.
CSK ரசிகர்களுக்கு சிறப்பு செய்தியை பகிர்ந்த ஜடேஜா…, ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னரே வைரலாகும் வீடியோ!!
இத்திட்டம் குறித்து பேசிய பள்ளிக்கல்வி இயக்குனர் ஜெனரல், விஜய் கிரண் ஆனந்த்”மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தவும், பள்ளி படிப்பை இடைநிற்றலை குறைப்பதற்காகவும் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தேர்வு தெரிவித்துள்ளார்.