தமிழகத்தில் 10ம் வகுப்பு செய்முறை தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செய்முறை தேர்வு
தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வை தொடர்ந்து ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் சமீபத்தில் கூட வெளியானது. இந்நிலையில் பொதுத் தேர்வுக்கு முன் செய்முறை தேர்வுகள் நேற்று நடைபெற்றது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால் இந்த தேர்வை சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை. இதனால் மாணவர்களின் நலன் கருதி மீண்டும் அறிவியல் செய்முறை எழுத மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ஏப்., 10 ஆம் தேதி இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!!
இதுகுறித்து அவர் கூறுகையில், மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதுவதில் கவனம் செலுத்த வேண்டும். 28 ஆம் தேதி தேர்வு எழுதும் வாய்ப்பை தவறவிட்ட மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என தெரிவித்துள்ளார்.