ஏப்., 10 ஆம் தேதி இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!!

0
ஏப்., 10 ஆம் தேதி இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!!
ஏப்., 10 ஆம் தேதி இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!!

ஏப்.10 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ்பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழா வரும் இம்மாதம் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த வகையில் இன்று பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்டு வந்த பக்கதர்கள் பூக்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சாத்தினர். இந்நிலையில் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஏப்.10 ஆம் தேதி நடைபெற உள்ளது.

மக்களே கவனம்.., இந்த முக்கிய நகரங்களில் நாளை வங்கிகளுக்கு விடுமுறை.., ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்த நாளில் பல இடங்களில் இருந்தும் மக்கள் வருவதால் ஏப்.10 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி, அரசு அலுவலங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். மேலும் இந்த அறிவிப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here