ஐபிஎல்லில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக வலம் வந்த, ரிஷப் பண்ட் காயம் காரணமாக விலகி உள்ளதால், இவருக்கு சரியான மாற்று வீரரை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரிஷப் பண்ட்:
இந்திய அணியின் முன்னணி வீரராக திகழ்ந்த ரிஷப் பண்ட், கடந்த ஆண்டு இறுதியில், பயங்கரமான கார் விபத்தில் சிக்கி இருந்தார். இந்த விபத்தில் ஏற்பட்ட காயங்களில் இருந்து, மீள்வதற்கான போராட்டத்தில் ரிஷப் பண்ட் தற்போது முயற்சி எடுத்து வருகிறார். இதனால், இவர் இந்த ஆண்டுக்கான, சர்வதேச அளவிலான போட்டிகளை இழந்ததோடு, ஐபிஎல் தொடரை இழந்து உள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இவர், கடந்த ஐபிஎல் தொடர்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தியவர். இதனால், இவரது இடத்திற்கு சரியான மாற்று வீரரை தேர்வு செய்வதில், டெல்லி அணி தடுமாறியே வந்தது. இதற்கிடையில் தான், ஆஸ்திரேலிய நட்சத்திரமான டேவிட் வார்னரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக நியமித்திருந்தது.
TNTET PAPER 2 ரிசல்ட்.., 2% பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி இல்லை.., ஷாக் ரிப்போர்ட்!!
அதிரடி பேட்ஸ்மேனான டேவிட் வார்னர், ரிஷப் பண்ட்டின் கேப்டன் பொறுப்பிற்கு தகுந்தவராக இருந்தாலும், விக்கெட் கீப்பருக்காக, அணி நிர்வாகம் வேறு வீரரை தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில், 20 வயது இளம் வீரரான, அபிஷேக் போரலை அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. இவர், முதல் தர போட்டிகளில், 695 ரன்களை குவித்து அசத்தியத்துடன், சிறந்த விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.