நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடு போன நகைகள் குறித்து வீட்டு வேலைக்காரி கொடுத்த வாக்குமூலம் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த்:
தமிழ் சினிமாவில் இயக்குனரும் சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளுமாகிய ஐஸ்வர்யாவின் வீட்டில் சமீபத்தில் 60 பவுன் நகைகள் திருட்டு போனது. அதன் பின் போலீசில் புகார் கொடுத்ததை தொடர்ந்து அவரது வீட்டில் வேலை பார்த்த வேலைக்காரி ஈஸ்வரி, கார் டிரைவர் வெங்கடேசன் பிடிபட்டனர். மேலும் வேலைக்காரியிடம் இருந்து காவல்துறை 100 பவுன் நகைகளை கைப்பற்றியது. ஆனால் ஐஸ்வர்யா 60 பவன் காணவில்லை என்று தான் புகார் அளித்திருந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இது குறித்து காவல் துறை ஐஸ்வர்யாவிடம் கேட்ட போது தனக்கு மீதமுள்ள நகைகளை பற்றி தெரியவில்லை, ஒருவேளை எனது நண்பர்கள் அன்பளிப்பாக கொடுத்த நகையாக இருக்கலாம் என்று குதர்க்கமாக பதில் அளித்துள்ளார். இதனால் போலீசுக்கு ஐஸ்வர்யா மீது சந்தேகம் வர அந்த வீட்டு வேலைக்காரியை தொடர்ந்து விசாரித்தனர்.
பெண்கள் குறித்த சர்ச்சையில் சிக்கிய திமிரு பட நடிகர்., மனைவியை விவகாரத்து செய்ததாக கூறி பரபரப்பு!!!
அப்போது திடுக்கிடும் தகவலை அவர் கூறியுள்ளார். அதாவது தான் ஐஸ்வர்யாவின் பினாமி என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் ஐஸ்வர்யா இது போன்று வேறு ஏதும் சொத்துக்களை மறைத்து வைத்திருக்கிறாரா என்று தெரிந்து கொள்வதற்கு, அவரின் வீட்டிற்கு வருமான வரித்துறை செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சும்மா போற ஓணானை வேட்டியில் விட்ட கதையை போச்சே என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.