ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து CSK அணி அகமதாபாத்தில் விளையாட உள்ளது.
IPL 2023:
இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் தொடங்குவதற்கு, இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளன. இதனால், ஐபிஎல் தொடரில் பங்குபெற உள்ள 10 அணிகளும் தற்போது தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த 10 அணிகளில், இந்தியாவின் முன்னணி வீரர்கள் பலரும் இணைந்து விட்டனர். இந்த முறை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது தான், ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதற்கு காரணம், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது சொந்த மைதானமான, சேப்பாக்கத்தில், கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் 7 போட்டிகளில் விளையாட உள்ளது. மேலும், தோனிக்கு இந்த சீசன் கடைசி சீசனாக கூட இருக்கலாம் என்பதே ஆகும். நேற்று, தோனி தலைமையிலான CSK அணியானது ரசிகர்கள் மத்தியில், சேப்பாக்க மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டது மிகவும் வரவேற்கத்தக்கதாக இருந்தது. கடந்த சீசனில் லீக் சுற்றுடன் வெளியேறிய CSK அணி இந்த முறை அசுர பலத்துடன், களமிறங்கி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீசன் தனது முதல் போட்டியில், CSK அணியானது, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் வரும் 31ம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது. இந்த இரு அணிகளும், கடந்த சீசனில் 2 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் இரண்டிலுமே குஜராத் அணியே வெற்றி பெற்றுள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் பட்சத்தில், CSK தனது முதல் போட்டியிலேயே வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.