நடிகர் அஜித் குமார் தந்தை நேற்று இறந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான SJ சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்குமார்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். நேற்று அவருடைய தந்தை பி. சுப்ரமணியம் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதுமட்டுமின்றி விஜய், உதயநிதி ஸ்டாலின் உட்பட பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான SJ சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அதாவது அவர் கூறியிருப்பதாவது, என்னுடைய ஆழ்ந்த இரங்கல் ஐயா.
நான் வாலி திரைப்படத்தின் கதையை அஜித் சார்க்கு சொல்லும் போது நீங்களும் அருகில் உட்கார்ந்து ரசித்து கேட்டீர்கள். அதை ஒருபோதும் என்னால் மறக்க முடியாது ஐயா. எப்பொழுதும் உங்களை நான் நேசிக்கிறேன் ஐயா. மேலும் அஜித் சார் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது அவருடைய ட்விட்டர் பதிவு வைரலாக பரவி வருகிறது.
RIP iyaa …. I still remember the days of “Vaali” story narration, iyaa use to sit with Ajith sir , and enjoy my narration… always love you iyaa ??? deepest condolences to Amma , Ajith sir , Shalini mam & to the family ?sjs https://t.co/bZXxBc65Fc
— S J Suryah (@iam_SJSuryah) March 24, 2023