ஐபிஎல் தொடரில் இருந்து, ஏற்கனவே முன்னணி வீரர்கள் பலர் காயம் காரணமாக விலகி உள்ள நிலையில், CSK மற்றும் LSG வீரர்களும் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2023:
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடரானது, உலக நாடுகளில் மிகவும் பிரபலமானது. இதன் அடிப்படையிலேயே, வெவ்வேறு நாடுகளில், இந்த லீக் தொடர் வெவ்வேறு பெயர்களில் நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், ஐபிஎல் தொடர் குறித்த எதிர்பார்ப்பு மட்டும் இந்திய ரசிகர்களுக்கு மத்தியில் குறைந்ததே இல்லை. மார்ச் 31ம் தேதி தொடங்க உள்ள இந்த ஐபிஎல் தொடரில் இருந்து, பும்ரா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட இந்திய வீரர்கள் விலகியதை அடுத்து, மேலும் சிலர் விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது, கடந்த ஆண்டு முதல் CSK அணியில் இடம் பெற்று தனது சிறந்த பங்களிப்பை அளித்த முகேஷ் சௌத்ரி, முதுகு வலி காயத்தால் தற்போது அவதிப்பட்டு வருகிறார். இதனால், ஐபிஎல் தொடங்குவதற்குள் அணிக்கு திரும்புவாரா என்பது பெரும் கேள்வி குறியாக உள்ளது. இவரை தொடர்ந்து, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக மொஹ்சின் கானும் கடந்த ஆண்டு முதல் விளையாடி வருகிறார்.
அஜித்தின் தந்தையுடன் இருந்த அந்த தருணம்.., உருகிய SJ சூர்யா- அவரே வெளியிட்ட பதிவு!!
கடந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். இவரும், காயங்களால் அவதிப்பட்டு வருவதால், ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகமாகி உள்ளது. இந்த இரு வீரர்களது வருகை குறித்தும், இவர்களுக்கான மாற்று வீரர் குறித்தும், CSK மற்றும் LSG அணி நிர்வாகங்கள் விரைவில் அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.