நடிகர் சூர்யா தனது குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆக இருப்பதாக ஒரு தகவல் சோசியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.
நடிகர் சூர்யா:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஜெய் பீம், சூரரை போற்று போன்ற அழுத்தமான படங்களில் தேர்ந்தெடுத்து நடிப்பவர் தான் நடிகர் சூர்யா. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படம் 10 மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் ஷூட்டிங் முடிவதற்குள்ளேயே வெளி வியாபாரத்தில் 500 கோடிக்கு மேல் கலெக்சனை அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனை தொடர்ந்து இவர் கடந்த 2006ம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற பையனும் இருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் சூர்யா குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சூர்யாவின் மகள் தியாவும், மகன் தேவும் மும்பையில் இருக்கும் பிரபலமான பள்ளி ஒன்றில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
ஐபிஎல் 2023: இந்த சீசனை RCB அணி வென்று விடுமோ? பயிற்சியில் கைகோர்த்த அடுத்த ஆல்ரவுண்டர்!!!
அதனால் அவர்கள் அங்கு தங்குவதற்காக 60 கோடி செலவில் 9000 சதுர அடியில் ஒரு புதிய வீட்டை வாங்கியிருக்கிறார்கள். மேலும் குழந்தைகள் இருவரும் படித்து முடிக்கும் வரை மும்பையிலேயே சூர்யாவும் ஜோதிகாவும் செட்டிலாக திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி ஸ்ரீ என்ற ஹிந்தி படத்தில் நடிகை ஜோதிகா நடித்து வரும் நிலையில், ஒருவேளை பாலிவுட்டிலே செட்டிலாக பிளான் போடுகிறாரோ? என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.