உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் இடத்திற்கு, மூன்று வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ஸ்ரேயாஸ் ஐயர்:
இந்திய அணியானது சமீபத்தில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை விளையாடி முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்த உள்ளது. இந்த ஐபிஎல் தொடர் மே மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், சர்வதேச இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மோத உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதால், ஜூன் மாதம் நடைபெற உள்ள இந்த இறுதிப் போட்டியில் இவரது இடம் கேள்வி குறியாகி உள்ளது. இதனால், இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இவருக்குத் தகுந்த மாற்று வீரரை தேர்வு செய்வதில், 3 வீரர் பரிந்துரையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தத்தளிக்கும் அழகை தளும்ப தளும்ப காட்டிய கனிகா.., கண்ணசைக்காமல் பார்த்து ரசிக்கும் இளசுகள்!!
அதில், சூர்யகுமார் யாதவ் முதன்மை பெறுகிறார். ஆனால் இவர், ஒருநாள் தொடரில் அதிக அளவில் தடுமாறி வருவதால், உள்ளூர் டெஸ்ட் சிறந்து விளங்கிய இருவர் மீது கவனம் திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ரஞ்சி டிராபி, ராணி கப் உள்ளிட்ட போட்டிகளில் அதிரடி காட்டிய சர்பராஸ் கான் மற்றும் ஹனுமா விஹாரி ஸ்ரேயாஸ் ஐயரின் இடத்திற்கு போட்டியிட்டு வருகின்றன. ஸ்ரேயாஸ் ஐயர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விலகுவது உறுதியானால், விரைவில் பிசிசிஐ மாற்று வீரரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.