ஐபிஎல் தொடருக்காக CSK அணியில் புதிதாக இணைந்த அஜிங்க்யா ரஹானே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
CSK
இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 16 வது சீசன் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த தொடரில், பங்குபெற உள்ள, பத்து அணிகளும் தங்களது பயிற்சியை, கடந்த 1ம் தேதி முதலே தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த தொடருக்கான அணி வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த ஏலத்தின் மூலம், இந்திய வீரரான அஜிங்கியா ரஹானேவை CSK அணியானது ரூ. 50 லட்சத்துக்கு வாங்கியது. இவர், இதற்கு முன் ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளை தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. CSK அணியின் தற்போதைய கேப்டனாக உள்ள தோனி, அடுத்த வருடம் நடைபெற உள்ள சீசன்களில் பங்கு பெறுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில் தான், ரஹானேவை CSK அணி தங்களது அணியில் இணைத்துள்ளது. இதனால், தோனி இல்லாத நிலையில், ரஹானே அணியை வழி நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தற்போது, CSK அணியுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.