இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப பொது போக்குவரத்துகளை மத்திய மாநில அரசுகள் மேம்படுத்தி வருகிறது. இதையடுத்து விமான போக்குவரத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதேபோல் விமானத்தில் பயணிகளின் அநாகரீக செயல்களும் அனுதினமும் ஈடேறி வருகிறது. இதனால் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை பயணத் தடை பட்டியலில் விமான போக்குவரத்து ஆணையம் சேர்த்து வருகிறது. அதன்படி கடந்த 2017ம் ஆண்டில் இருந்து இதுவரை 143 நபர்களின் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங். தெரிவித்துள்ளார்.
இந்த பட்டியலில் கடந்த ஆண்டு மட்டும் 63 நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இண்டிகோ நிறுவனத்தால் 46 பேரும், விஸ்டாரா நிறுவனத்தால் 16 பேரும், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தால் ஒருவரும் தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.