கோடை காலங்களில் மக்கள் சுற்றுலா இடங்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து சுற்றுலா மற்றும் தொழில் ரீதியாக வளைகுடா நாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் இதற்கான முன்பதிவுகளும் விரைவாகவே தீர்ந்து விடுகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் சென்னை to வளைகுடா நாடுகளான அபுதாபி, சவுதி, கத்தார், ஓமன் நாடுகளுக்கு மார்ச் 26ம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மீண்டும் கோடை கால விமான சேவை தொடங்க உள்ளதால் அதிக அளவிலான சுற்றுலாப்பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என்று விமான நிறுவனங்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.., தென்னக ரயில்வே துறை அறிவிப்பு!!!
மேலும் இதற்கேற்ப சென்னை to மஸ்கட், அபுதாபி மற்றும் ஐதராபாத் to அபுதாபி இடையே தினசரி விமான சேவையை இண்டிகோ விமான நிறுவனம் தொடங்கியுள்ளது. இதையடுத்து இந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி விமான நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.