என்னது.., சினிமால இருந்து மொத்தமா பாண்டிராஜ் விலகிட்டாரா? வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
என்னது.., சினிமால இருந்து மொத்தமா பாண்டிராஜ் விலகிட்டாரா? வெளியான அதிர்ச்சி தகவல்!!
என்னது.., சினிமால இருந்து மொத்தமா பாண்டிராஜ் விலகிட்டாரா? வெளியான அதிர்ச்சி தகவல்!!

இயக்குனர் பாண்டிராஜ் சினிமாவில் இருந்து விலகியதாக சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாண்டி ராஜ்:

தமிழ் சினிமாவில் பசங்க, வம்சம், மெரினா, கடைக்குட்டி சிங்கம் போன்ற வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இயக்குனர் பாண்டிராஜ். இவர் கடைசியாக இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று படுதோல்வி அடைந்தது. அதன் பின்னர் எந்த படத்தில் கமிட் ஆகாமல் இருந்து வந்த பாண்டிராஜ் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது பாண்டிராஜ் சினிமாவில் இருந்து விலகி தனது சொந்த ஊரான திருமயத்தில் முழு நேர விவசாயியாக மாறிவிட்டதாக கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது குறித்து சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் அவர் பேசியதாவது, எனது நண்பர் ஒருவர் நீ அதிக விருதுகளை வாங்குகிறாய், முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றுகிறாய், இதனால் உன்னுடைய பெற்றோர்களின் ஆத்மா சாந்தி அடையுமா என்று கேட்டான். அதற்கு நான் அவர்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள் என்று கூறினேன். உனது பெற்றோர் விவசாயம் செய்த நிலம் வறண்டு போய் கிடக்கிறது. இதை பார்த்தால் அவர்கள் எப்படி சந்தோஷமாக இருப்பார்கள் என்று என்னை பார்த்து என் நண்பன் கேட்டான். அதைக் கேட்டதும் செண்டிமெண்டாக விவசாயத்தை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

செய்யாத குற்றத்திற்கு பழி ஏற்க்கும் வெற்றி., கொலை செய்த நபர் யார்.., தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ட்விஸ்டு!!

அதனை தொடர்ந்து விவசாயத்தில் இறங்கி, நிலத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் பல கஷ்டங்களுக்கு பிறகும் தொடர்ந்து விவசாயத்தை செய்து வருகிறேன். அந்த வகையில் இந்த வருடம் 114 மூட்டை நெல் அறுவடை செய்தேன். மேலும் அறுவடை செய்யும் வரை செலவான பணத்தை எனது மனைவி டைரியில் எழுதி வைத்துள்ளார். இதுமட்டுமின்றி நெல் விற்ற பணத்தை செலவு செய்த பணத்தோடு ஒப்பிட்டு இதுதான் லாபம் என்று கூறினார். சினிமாவில் நான் படம் எடுத்து சம்பாதித்த மகிழ்ச்சியை விட, நான் செய்த விவசாயத்தில் கிடைக்கும் நெல்லில் சாப்பிடும் போது அதிக சந்தோஷம் தருகிறது என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here