தமிழ்நாட்டில் முக்கிய தலைவர்களின் நினைவு தினங்களை அனுசரிக்கும் விதமாக டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என வாழ்க்கை நெறிமுறைகளை வழங்கிய வடலூர் இராமலிங்க அடிகளாரின் நினைவு தினம் பிப்ரவரி 5ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இவர் சொற்பொழிவு மட்டுமில்லாமல் சித்த மருத்துவர், ஆசிரியர், எழுத்தாளர் என பன்முகத்தன்மையை கொண்டவர். இன்றளவும் இவர் வாழ்ந்த பெருமைமிகு இல்லம் சென்னையில் உள்ளது. இதனால் வள்ளலாரின் நினைவு தினத்தை அனுசரிக்கும் பொருட்டு பிப்ரவரி 5ம் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து விதமான டாஸ்மாக் மற்றும் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக பெண் குழந்தைகளுக்கு சூப்பர் திட்டம்.., ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
மேலும் தடையை மீறி மது பானங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். இன்றைய நாள் தைப்பூசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.