ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகை திட்டங்களுக்கு ஆதார் எண் இணைப்பை மத்திய, மாநில அரசுகள் கட்டாயமாக்கி வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் முதலமைச்சரின் பெண் குழந்தை திட்டத்தில் பயன் பெறுபவர்கள் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குடும்பத்தில் 1 முதல் 2 பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கவோ அல்லது தத்தெடுக்கவோ கூடாது. மேலும் 10 ஆண்டு குடியுரிமை உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை அறிவித்துள்ளது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருப்பின் ரூ.50,000 எனவும், 2 பெண் குழந்தை இருப்பின் தலா ரூ.25,000 எனவும் வைப்பு நிதியாக தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் செலுத்தப்படும்.
தன்னை போல் இருக்கும் நபரை கண்டு பிடித்து கொலை செய்த மாடல் அழகி.., ஜெர்மனியில் நடந்த கொடூர சம்பவம்!!
இதற்கான ரசீதுகளும் பெற்றோர்களுக்கு வழங்கப்படும். இதனால் இத்திட்டத்தில் பயன்பெறும் மற்றும் பயன் பெற விரும்புபவர்கள் குழந்தைகளின் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆதார் அட்டை இல்லையெனில் ஆதார்க்கு விண்ணப்பித்த படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.