தன்னை போல் இருக்கும் நபரை கண்டு பிடித்து கொலை செய்த மாடல் அழகி.., ஜெர்மனியில் நடந்த கொடூர சம்பவம்!!

0
தன்னை போல் இருக்கும் நபரை கண்டு பிடித்து கொலை செய்த மாடல் அழகி.., ஜெர்மனியில் நடந்த கொடூர சம்பவம்!!
தன்னை போல் இருக்கும் நபரை கண்டு பிடித்து கொலை செய்த மாடல் அழகி.., ஜெர்மனியில் நடந்த கொடூர சம்பவம்!!

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் வித்தியாசமான காரணங்களால் பல கொலைகள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. அதன்படி ஜெர்மனியில் நடந்த சம்பவம் உலகத்தையே உலுக்கி உள்ளது. அதாவது ஜெர்மனியில் ஷஹ்ரபான் கே. மாடல் அழகி ஒருவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வந்துள்ளார். மேலும் அழகை எப்படி குறைய விடாமல் இருப்பதை குறித்து இன்ஸ்டாகிராமில் பலருக்கும் அறிவுரை வழங்கி வந்துள்ளார். அந்த இன்ஸ்டாகிராமில் இவரை போல் இருக்கும் கதீட்ஜா ஓ என்ற பெண்ணிடம் பழகி வந்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதுமட்டுமின்றி ஷஹ்ரபான் கே, ஷேகிர் கே என்ற வாலிபரை காதலித்து வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காதலனைப் பார்க்கச் செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பாத நிலையில், அவரின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அதற்கடுத்து காவல்துறை தனது விசாரணையை ஆரம்பித்த போது, இங்கோல்ஸ்டாட் நகரில் அவர் சென்ற காரில் சடலமாக கிடந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் இறந்தது ஷஹ்ரபான் கே அல்ல எனவும் அது கதீட்ஜா ஓ என்ற பெண் என்பது தெரியவந்தது.

தமிழ்நாட்டின் விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு.., பயணிகளின் வசதிக்காக தென்னக ரயில்வேவின் சிறப்பு ஏற்பாடு!!!

இதை தொடர்ந்து 6 மாதமாக விசாரித்து வந்த நிலையில், தற்போது தான் கொலைக்கான காரணம் தெரியவந்தது. அதாவது குடும்ப பிரச்சனை காரணமாக தன்னை போல் இருக்கும் பெண்ணை கண்டுபிடித்து கொலை செய்து அது நான் என்று நாடகமாட நினைத்துள்ளார். இதனால் கதீட்ஜாவுடன் பழகி அவரை நேரில் சந்தித்து காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார் என்று தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here