மதுரையில் மெட்ரோ ரயில் அமைப்பது குறித்த திட்ட அறிக்கை மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இதற்கான பணிகள் துவங்கும் என மெட்ரோ திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.
வெளியான அறிவிப்பு:
சென்னை போன்ற பெரு நகரங்களில் மக்கள் அதிகம் பயன்படுத்தும், முக்கிய ரயில் போக்குவரத்துகளில் ஒன்று மெட்ரோ சேவை. அந்த வகையில், தென் மாவட்டமான மதுரையில் இந்த மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வருவது குறித்து சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதற்கான திட்ட அறிக்கை ஒன்று தயார் செய்யப்பட்டு, தற்போது மாநில அரசிடம் ஒப்புதலுக்காக தரப்பட்டுள்ளது. ஒத்தக்கடை to திருமங்கலம் வழியாக 31 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த மெட்ரோ சேவை அமைக்க சாத்தியம் உள்ளதாகவும், கோரிப்பாளையம், வசந்த நகர் பகுதியில் மட்டும் சுரங்கப்பாதை அமைக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனவை தொடர்ந்து சென்னையில் பரவும் புதுவகை வைரஸ்.., எச்சரிக்கையாக இருக்க மருத்துவர்கள் அறிவுரை!!!
இதுகுறித்து பேசிய மெட்ரோ திட்ட இயக்குனர், அரசு ஒப்புதல் அளித்த பிறகு, இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்குள் இந்த சேவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு மதுரை வாசிகளிடையே, வரவேற்பை பெற்றுள்ளது.