நாடு முழுவதும் காலநிலை மாற்றத்தால் புது புது வைரஸ்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீப காலமாக சென்னையில் காய்ச்சல், சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இவ்வகை அறிகுறிகள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நீடிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்த மாதிரியை சோதித்தபோது இன்ஃப்ளூயன்ஸா A மற்றும் H1N1 வைரஸ் இருப்பது தெரிய வந்தது. மேலும் கொரோனா, புளூ காய்ச்சல் போன்ற மருத்துவ சோதனையின் முடிவிலும் “நெகட்டிவ்” என்றே ரிசல்ட் வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்., வரும் பிப்ரவரி மாதத்தில் 6 நாட்கள் Leave! வெளியான அறிவிப்பு!!
ஆனால் இவ்வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் விரைவில் குணமடைந்து வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் நோயாளிகள் எண்ணிக்கையும் பெருமளவில் இல்லை என்றும் கூறியுள்ளனர். எனினும் தற்போது டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.