உலக அளவில் முதல் முறையாக 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான U19 மகளிர் T20 உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவில் ஜனவரி 4ம் தேதி முதல் தொடங்கியது. ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய மகளிர் அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதை தொடர்ந்து நேற்று நடந்த இறுதி போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியை எதிர்கொண்டது. இந்திய அணி வீராங்கனை பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சுலப இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிமையாக வெற்றி பெற்று உலக கோப்பை கைப்பற்றியது.
இந்திய அணி உலக கோப்பையை வெல்லாததால் பயிற்சியாளர் எடுத்த அதிரடி முடிவு…, வெளியான தகவல்!!
இதுகுறித்து கேப்டன் ஷபாலி வர்மா கூறுகையில், “முன்னதாக ஆஸ்திரேலிய அணியுடன் தோல்வி அடைந்து உலகக்கோப்பையை தவற விட்டோம். இதனால் வலிமிகுதியால் கண்ணீர் விட்டோம். ஆனால் தற்போது இந்த உலக கோப்பை வென்று ஆனந்த கண்ணீர் விடுகிறோம். இனி இந்த வெற்றியை முதற்படியாக எடுத்து கொண்டு சீனியர் உலக கோப்பை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன்.” என ஆனந்த கண்ணீருடன் கூறியுள்ளார்.