மத்திய அரசின் திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்களை விநியோகம் செய்த பணியாளர்களுக்கு உதவி தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வெளியான அறிவிப்பு:
கடந்த கொரோனா காலகட்டத்தில், மத்திய அரசின் கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் வாயிலாக இலவச உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் முறைகேடு நடந்ததாகவும், இதில் வழங்கப்பட்ட பொருட்களை விற்பனையாளர்கள் பதுக்கி வைத்து முறைகேடாக விற்பனை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இது போக, இத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய ரேஷன் விற்பனையாளர்களுக்கு, கார்டுக்கு ரூ. 0.50 வீதம் ஊக்கத்தொகை வழங்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தது.
பிப்.1 ல் உருவாகும் புதிய புயல்? தமிழகத்திற்கு இவ்ளோ பாதிப்பா? வானிலை மையம் எச்சரிக்கை!!
இதற்காக மே 2020 முதல் நவம்பர் 2020 வரையிலும் மே 2021 முதல் மார்ச் 2022 வரையிலும் இந்த இலவச திட்டத்தில் பொருட்களை விநியோகம் செய்த ரேஷன் அட்டைதாரர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது. இந்த விவரங்களை உடனடியாக, அனுப்ப வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், அனைத்து மண்டல உதவி ஆணையாளர்களுக்கு முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.