வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருவதால் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்திருந்தது.
காற்றழுத்த தாழ்வு:
நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மாநிலங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்நிலையில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வடமேற்கு திசையில் நகர்வதால் ஜனவரி 31ம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் பிப்ரவரி 1ம் தேதி தாழ்வு மண்டலம் இலங்கை கடற்கரையை அடையும் என்றும் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? மௌனம் சாதிக்கும் அரசு! ஊழியர்கள் எடுத்த திடீர் முடிவு!!
எனவே இந்நாட்களில் தமிழக கடலோர மற்றும் அதையொட்டி உள்ள மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். அதேபோல் மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.