விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ப்ரைம் டைம் சீரியல்கள் தற்போது ஏகப்பட்ட ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இப்போது உள்ள சீரியல்களான பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, மௌனராகம், ஆகியவை ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க வரவேற்பை பெற்று TRB யில் முன்னிலையில் இருந்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்படி இந்த சீரியல்கள் வெற்றிகரமாக போய்க்கொண்டு இருப்பதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று இதன் கதை எழுந்தார் தான். இந்த மூன்று சீரியல்களையும் பிரியா தம்பி அவர்கள் தான் ஸ்கிரிப்ட் எழுதி வருகிறார். இந்நிலையில் இன்று முதல் இரவு 10 மணிக்கு விஜய் திரையில் ஒளிபரப்ப இருக்கும் மகாநதி சீரியலையும் இவர் தான் எழுதுகிறார்.
ஸ்டன்னிங் லுக்கில் இளசுகளை கவரும் ஐஸ்வர்யா லட்சுமி., கருப்பு நிற உடையில் சும்மா ஜொலிக்குறீங்களே!!!
இந்த சீரியலின் கதை தந்தை மறைவுக்கு பிறகு அவரின் பாசத்திற்கு ஏங்கும் நான்கு பெண் குழந்தைகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும் பிரியா தம்பி அவர்கள் இதுவரை 3 சீரியல்களுக்கு கதை எழுதி வரும் நிலையில் தற்போது 4 வதாக இந்த சீரியலுக்கும் கதை எழுதவுள்ளதால் இந்த சீரியலும் TRB யில் முதலிடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.