கொரோனா தடைகள் தளர்ந்துள்ளதால் பக்தர்கள் எந்தவித இடையூறும் இன்றி கோவில்களில் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் உலகத்தரம் வாய்ந்த கோவில்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் வசதி மற்றும் பாதுகாப்பு பணிகளை கோவில் நிர்வாகம் மேம்படுத்தி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதன் தொடர்ச்சியாக திருச்சி வந்த அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், “பழனி கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்க 47,000 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்து உள்ளனர். ஆனால் குலுக்கல் முறையில் 2,000 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க உள்ளோம்.
மூன்று சீரியலில் கலக்கும் முக்கிய பிரபலம்.., 4 வது சீரியலிலும் என்ட்ரி கொடுத்து சாதனை!!!
மேலும் திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய “ரோப்கார்” அமைக்க போதுமான இடம் இல்லை. ஆதலால் “லிப்ட்” வசதி ஏற்படுத்தலாமா? என்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். அதற்கான அறிவிப்பு விரைவில் தெரிவிப்போம்” என்று கூறியுள்ளார்.