தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய மகளிர் அணி:
ஐசிசி சார்பாக மகளிருக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த 10ம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில், இந்திய மகளிர் அணியானது, தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக முத்தரப்பு தொடரில் விளையாட திட்டமிட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த தொடருக்காக, இந்திய மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை குவித்திருந்தது. இதில், ஸ்மிருதி மந்தனா (74*) மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் (56*) அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தனர். சற்று கடினமான இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த முத்தரப்பு தொடரில், தொடர்ந்து இரு வெற்றிகளை பெற்று இந்திய அணி முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.