ரோஜா சீரியல் நாயகி புதிதாக கமிட்டாகியுள்ள சீதாராமன் சீரியலில், வெள்ளித்திரை பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
வெளியான தகவல்:
சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா தொடர் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை பிரியங்கா நல்கார். இந்த சீரியல் சமீபத்தில் முடிவுக்கு வந்த நிலையில், இவர் தற்போது ஜீ தமிழில் புதிதாக தொடங்க உள்ள சீதாராமன் என்ற சீரியலில் நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகர் ஜெய் கிஷோர் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த சீரியலுக்கான ப்ரோமோ ஷூட் இன்று தொடங்கிய நிலையில், இந்த சீரியல் குறித்த பல சுவாரஸ்ய தகவல்கள் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த சீரியலில், 90ஸ் ஃபேமஸ் நடிகையான ஜெமினி பட ராணி இணைய உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்ல குடும்ப குத்து விளக்கு இருந்துட்டு இப்ப இப்படியா? எல்லை மீறும் காவியா அறிவுமணி!!
இவர் இந்த படத்தில் “ஓ போடு” பாடல் மூலம் பெரிய அளவில் ரீச் ஆனவர். தற்போது இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த சீரியலில், ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.