சமீபத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காசி தமிழ் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அதில் தமிழ்நாடு என்பது குறிப்பிடுவதை விட தமிழகம் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும் என பேசியிருந்தார். இதனால் தமிழகம் என பெயர் மாற்றத்தை செய்ய விரும்புகிறார் என ஆளுநர் மீது பெரும் சர்ச்சை உருவாகியது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர், காசி தமிழ் மக்களை இணைக்கும் வகையிலே இவ்வாறு கூறினேன். இதை தமிழ்நாடு என பெயர் மாற்ற கூறியது போல் சர்ச்சை உண்டாவது யதார்த்துக்குரியது என பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
ரயில் பயணிகளே உஷார்., இந்த சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.., ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!!
இதையடுத்து தற்போது ஆளுநர் மாளிகையின் குடியரசு தின விழா அழைப்பிதல் வெளிவந்துள்ளது. இந்த அழைப்பிதழில் தமிழகம் என்ற சீல் மாற்றப்பட்டு தமிழ்நாடு என பதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழகம் என சீல் இடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.