கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த 15ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பல வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவுக்கான சுற்றில் சானியா மிர்சா அன்னா டானிலினா இணை அலிசன் வான் உய்ட்வான்க் (பெல்ஜியம்) மற்றும் அன்ஹெலினா கலினினா (உக்ரைன்) இணையை எதிர்கொண்டது.
இந்த இரு ஜோடிகளுக்கு இடையே நடந்த பரப்பான ஆட்டத்தில் 4-6 6-4 2-6 என்ற செட் கணக்கில் சானியா ஜோடி தோல்வி அடைந்த தொடரில் இருந்து வெளியேறியது. இந்த போட்டி சானியா மிர்சாவிற்கு கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் அவர் ஓய்வு பெற இருப்பதாக தெரிவித்துள்ளார்.