கடந்த 2022ம் ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது.
அதிக ரன்கள்:
இந்திய அணியானது தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில், சிறப்பாக செயல்பட்ட போதும் பவுலிங்கில் தடுமாறியது. ஆனாலும், இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி நேரத்தில் வெற்றியை உறுதி செய்திருந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும், நடப்பு வருடம் 50 ஓவர் உலக கோப்பை தொடர் நடக்கவிருப்பத்தால், சர்வதேச அணிகள் அனைத்தும் இதற்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது.
உலக கோப்பையில் இருந்து முன்னணி வீரர் விலகல்…, பின்னடைவை சந்திக்குமா இந்தியா??
இதில், இந்தியாவின் சுப்மன் கில் 2022ஆம் ஆண்டு முதல், 16 இன்னிங்ஸில் 1053 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 12 இன்னிங்ஸில் 828 ரன்களும், இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் 18 இன்னிங்ஸில் 818 ரன்களும் எடுத்து அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.