தமிழ்நாடு அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பணியிடங்களில் தற்காலிகமாக ஆசிரியர்களை மேலாண்மை குழு தேர்ந்தெடுத்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் ஏற்கனவே தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இல்லா பணிகளுக்கு தொகுப்பூதியத்தில் பணி அமர்த்தப்பட்டவர்களின் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்மையில் இவர்களுக்கான தொகுப்பூதியம் மற்றும் ஊதிய உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தொழில் நுட்ப கோளாறால் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்.., நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!!
அதன்படி அறநிலையத்துறையின் கீழ் இயங்கிவரும் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதிய உயர்வு வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் 354 தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இல்லா பணியாளர்களுக்கு தொகுப்பூதிய ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.