உலக கோப்பை ஹாக்கி தொடரில், காயம் காரணமாக இந்தியாவின் முன்னணி வீரரான ஹர்திக் சிங் விலகி உள்ளார். இவருக்குத் தகுந்த மாற்று வீரரை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஹாக்கி:
இந்தியாவில் ஆடவருக்கான உலக கோப்பை ஹாக்கி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்திய அணியானது, குரூப் D யில், இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் வேல்ஸ் ஆகிய அணிகளுடன் இடம் பெற்றிருந்தது. இதில், ஸ்பெயின் மற்றும் வேல்ஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை மட்டும் டிரா செய்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால், இந்திய அணி 7 புள்ளிகளுடன் குரூப் D யில் 2வது இடத்தை பிடித்து நேரடியாக காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதன் விளைவால், நாளை நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் மோத உள்ளது. இதற்கிடையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது, இந்தியாவின் மிட்பீல்டர் ஹர்திக் சிங்கிற்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது.
இந்த காயத்தில் இருந்து மீண்டு வர ஹர்திக் சிங்கிற்கு சில நாட்கள் ஆகும் என்பதால், இவர் உலக கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவரது விலகல் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். இதனால், ஹர்திக் சிங்கிற்கு மாற்று வீரராக ராஜ் குமார் பாலை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது .