நடிகை மீனாவை தனக்கு திருமணம் செய்து தரும்படி, அவரின் அம்மாவிடம் நடிகர் சரத்குமார் பெண் கேட்டு சென்றதாக பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பயில்வான் ரங்கநாதன்:
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது, டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மீனா. இவர் தனது 2009 ஆம் ஆண்டு, தொழிலதிபர் வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு, தற்போது நைனிகா என்ற மகள் உள்ளார். கடந்தாண்டு எதிர்பாராத விதமாக மீனா கணவர் திடீரென உயிரிழந்தார். அதன் பிறகு இடிந்து போய் உட்கார்ந்து இருந்த நடிகை மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த நிலையில் சினிமா பிரபலங்களின் அந்தரங்க விஷயம் குறித்து, வெளிப்படையாக பேசி வரும் பயில்வான் ரங்கநாதன், சரத்குமார் குறித்த முக்கிய உண்மையை தெரிவித்துள்ளார். அதாவது, மீனாவுடன் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த சரத்குமார், அவரை திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்து, மீனாவின் அம்மாவிடம் அவரை கட்டித் தருமாறு பெண் கேட்டாராம்.
ஆனால், சரத்குமாருக்கு வயது அதிகம் என்பதாலும், மீனா அப்போது டாப்பில் இருந்ததாலும் அதைப் பற்றி பேச வேண்டாம் என அவர் அம்மா மறுத்துவிட்டாராம். அதன் பிறகு சரத்குமார் இந்த பேச்சையே விட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.