ஈரமான ரோஜாவே சீரியலில் இப்பொழுது யாருமே எதிர்பார்க்காத விதமாக ஜீவா விபச்சார விடுதிக்கு சென்றதாக போலீசில் சிக்கிக் கொள்ள இதனால் பெரிய பிரச்சனை வெடிக்கிறது. மேலும் பிரியாவை அழைத்து விஷயத்தை சொல்ல போலீஸ் ஸ்டேஷன் வைத்து ஜீவாவை கன்னத்தில் அறைகிறார். இந்த மாதிரி ஆளுங்களுக்கு இதெல்லாம் பத்தாது என்று சொல்லி அசிங்கப்படுத்துகிறார்.
ஜீவா எதுவும் சொல்ல முடியாமல் கூனி குறுகி நிற்கிறார். மேலும் அவமானப்பட்டு நிற்கும் ஜீவா செய்வதறியது தவித்துக் கொண்டுள்ளார். இதற்கடுத்து தான் கதையே நகர போகிறது. அதாவது காவியாவிற்கு ஜீவாவை பற்றி நன்றாகவே தெரியும். இந்த விஷயம் தெரிந்து துடித்து போகும் காவியா அவருக்கு சப்போர்ட் செய்ய அப்பொழுது பிரியா தேவை இல்லாமல் அவரைப் பற்றி தவறாக பேச காவியா பிரியாவிடம் கத்தி விடுவாராம்.
ஜீவா பத்தி உனக்கு என்ன தெரியும் அவர் நல்லவர் என்று நிரூபித்து அவரை வெளியே கொண்டு வருவாராம். அதன் பிறகு தான் ஜீவாவும் இதே போல தான் காவியாவிற்கு சப்போர்ட் செய்து பேசினார். இதே போல் தான் இப்பொழுதும் காவியா ஜீவாவிற்கு சப்போர்ட்டாக நடந்து கொள்கிறார். அப்படி என்றால் இரண்டு பேருக்கும் இடையில் ஏதோ உள்ளது என்று சந்தேகம் வருமாம். அதன் வழியே தான் இன்னும் கொஞ்ச நாளில் பிரியாவும் ஜீவாவும் காதலித்த விஷயம் வெளியே தெரியுமாம். அதன் பிறகு தான் சீரியல் சூடு பிடிக்கவே ஆரம்பிக்கும். பார்த்திபன் காவியா மீது உயிரையே வைத்திருந்தது நாம் அனைவருக்குமே தெரியும். இப்படி இருக்க இந்த விஷயம் தெரிந்து நொந்து போவாராம். மேலும், ஏன் காவியா என்கிட்டே எதையுமே சொல்லல, என்று சொல்லி கதறுவாராம்.