இந்தியன் சூப்பர் லீக் தொடரில், ஈஸ்ட் பெங்கால் அணிக்கு எதிரான போட்டியை ஹைதராபாத் அணி 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியன் சூப்பர் லீக்:
மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களை மையமாக கொண்டு, இந்தியன் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், நேற்று ஈஸ்ட் பெங்கால் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி மோதியது. இதில், போட்டியின் 9 வது நிமிடத்திலேயே ஹைதராபாத் அணியின் ஜேவியர் சிவேரியோ கோல் ஒன்றை அடித்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த ஒரு கோலை தக்க வைத்துக் கொண்ட ஹைதராபாத் அணி, முதல் பாதி வரையிலும் எதிரணியை கோல் போட விடாமல் தடுத்து மட்டுமே வந்தது. இதனால், ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணி முன்னிலை பெற்று இருந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில், இரு அணிகளும் ஒரு கோலுக்காக பல தாக்குதலை மேற்கொண்டு வந்தனர்.
ஆனால், ஈஸ்ட் பெங்கால் அணி கடைசி வரை கோல் அடிக்காத நிலையில், ஹைதராபாத் அணியின் (90+3) ஆரன் டி சில்வா ஒரு கோல் அடித்தார். இதனால், ஆட்ட நேர முடிவில், ஹைதராபாத் அணி 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 35 புள்ளிகளுடன் 11 அணிகள் கொண்ட புள்ளி பட்டியலில் 2வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது. இந்த தொடரில், இன்று ஏடிகே மோகன் பகான் அணிக்கு எதிராக சென்னை அணி மோத உள்ளது.