விஜய் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரை பிரிய காரணம், தளபதி மனைவி சங்கீதா தான் என பிரபலம் ஒருவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பிரபலம் பேட்டி :
நடிகர் விஜய் தனது வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து, லோகேஷ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். விஜய்யின் இந்த உயர்வுக்கு காரணம் அவரது கடின உழைப்பு என்றாலும், இதில் விஜய்யின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகரின் பங்கு, மிக முக்கியமான ஒன்று. ஆனால் சில காலமாக, விஜய் மற்றும் எஸ்ஏசி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
தற்போது இதற்கான காரணம் குறித்து பிரபலம், ஒருவர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அதாவது விஜய்யின் துப்பாக்கி படம் வரை அவரின் அனைத்து பொறுப்புகளையும் தந்தை எஸ்ஏசி தான் கவனித்து வந்தார். ஆனால் அந்த படத்திற்கு பிறகு, சங்கீதா நீங்கள் ஏன் கதை கேட்கக் கூடாது, உங்க பெயரில் ஏன் செக் வாங்க கூடாது, என தனது கணவரை தூண்டி விட்டார்.
அந்த தூண்டுதலின் பெயரில், விஜய் அவரது தந்தையிடம் சென்று இது பற்றி கேட்டபோது வாக்குவாதம் முற்றிவிட்டது. இந்த பிரச்சனையில் தான் விஜய் அவரது அப்பா வீட்டில் இருந்து வெளியேறி நீலாங்கரை வீட்டில் தனி குடித்தனம் வந்தார். இது அப்பாவுக்கு மகனுக்கும் இடையே என சாதாரண பிரச்சனை தான். ஆனால் அவர்களுக்கு, வெளியில் இருந்து ஏதாவது பிரச்சனை வந்தால் இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். இதுதான் அவர்களின் உறவு என பெருமையாக தெரிவித்துள்ளார்.