அரசு துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், 2 மற்றும் 3 என அடுத்தடுத்து குழந்தைகள் பெற்றுக் கொண்டால் அவர்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படும் என சிக்கிம் அரசு அறிவித்துள்ளது.
வெளியான அறிவிப்பு:
தமிழகத்தில், அரசு துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு, ஊதியத்துடன் கூடிய கர்ப்ப கால விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிக்கிம் மாநிலத்தில் மக்கள் தொகையின் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. மாநிலத்தில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது, அரசுத் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் 2து குழந்தை பெற்றுக் கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வும், 3வது குழந்தை பெற்றால் டபுள் ஊதிய உயர்வும் வழங்கப்படும் என மாநில முதல்வர் பிரேம் சிங் தமங் அறிவித்துள்ளார்.
பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டம்., ரூ.13,000 கோடி நிதி அனுப்ப கோரிக்கை! மாநில அரசு கடிதம்!!
ஏற்கனவே மற்ற மாநிலங்களுக்கு முன்பே, சிக்கிம் அரசு பிரசவத்திற்கு பின் அம்மாவுக்கு ஓராண்டும், அப்பாவுக்கு 30 நாட்களும் மகப்பேறு விடுமுறையை அறிவித்திருந்தது. தற்போது, அரசின் இந்த புதிய திட்டத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இது மட்டும் இல்லாமல் குழந்தை பெற, இயலாத பெண்களுக்கு செயற்கை கருத்தரித்தல் முறையில் சிகிச்சை அளிக்கவும் அரசு ஏற்பாடு செய்து வருகிறது.