பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டம்., ரூ.13,000 கோடி நிதி அனுப்ப கோரிக்கை! மாநில அரசு கடிதம்!!

0
பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டம்., ரூ.13,000 கோடி நிதி அனுப்ப கோரிக்கை! மாநில அரசு கடிதம்!!
பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டம்., ரூ.13,000 கோடி நிதி அனுப்ப கோரிக்கை! மாநில அரசு கடிதம்!!

பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டமான, பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் ரூ. 13,000 கோடி நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என மேற்கு வங்காள அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

மத்திய அரசுக்கு கடிதம்:

பாரதப் பிரதமரின் திட்டத்தின் கீழ் இலவச கேஸ், இலவச வங்கி கணக்கு மற்றும் விவசாயிகளுக்கு உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டமான பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில், இந்தத் திட்டம் குறித்து முக்கிய கடிதம் ஒன்றை மத்திய அரசுக்கு, மேற்கு வங்க அரசு முக்கிய கடிதம் அனுப்பியுள்ளது. அதாவது, இந்தத் திட்டத்திற்கு மாநில அரசு 40%ம், மத்திய அரசு 60%ம் வழங்கி வருகிறது.

கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் மாநில அரசின் தொகையான ரூ.4,800 கோடியை அரசு ஒதுக்கியுள்ளதாகவும், மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ, 13000 கோடி தொகை இன்னும் வழங்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இந்த திட்டத்தில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், விரைந்து இதற்கான தொகையை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here