ஆண்டுதோறும் பண்டிகை, திருவிழா என பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னிட்டு அரசு விடுமுறை நாட்களை அறிவித்து வருகிறது. மேலும் கொரோனா தடை காலத்திற்கு பிறகு மக்கள் பண்டிகை, திருவிழாக்களை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். தற்போது மார்கழி மாதம் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் திருவிழா நடைபெற்று வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் பக்தர்கள் 25 நாட்கள் விரதம் இருந்து கோலாகலமாக கொண்டாடும் ஹெந்தையம்மன் கோவில் திருவிழா ஜனவரி 4 ல் நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் நீலகிரி மட்டுமில்லாமல் மற்ற மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது.
பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் கவனத்திற்கு!! நாளை தான் கடைசி, இதை பண்ணீட்டீங்களா?
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 4ம் தேதி அன்று அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறையாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஜனவரி 21ம் தேதி அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி நிறுவனங்களுக்கு வேலை நாளாக தெரிவித்துள்ளார்.