தெலுங்கு நடிகர் நானி நடிக்க இருக்கும் 30 வது படத்தின் ஹீரோயின் குறித்து முக்கிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
நடிகர் நானி :
தெலுங்கு வட்டாரங்களில் முன்னணி கதாநாயகனாக ஜொலித்து வருபவர் தான் நடிகர் நானி. இவர் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் இவர் நடித்த நானி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது இவர் தசரா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படம் பல மொழிகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
சும்மா நெய்க்குழந்தை மாதிரி வழுவழுன்னு இருக்கீங்களே அமலா பால்.., ஜொள்ளுவிடும் இளசுகள்!!
அவரின் சினிமா வாழ்க்கையில் கிட்டத்தட்ட 29 படங்களில் நடித்து முடித்திருக்கும் நிலையில், தற்போது அடுத்த படம் குறித்து சமூக வலைதளங்களில் ஒரு அப்டேட் வெளியாகி உள்ளது.. அதாவது நடிகர் நானியின் 30வது திரைப்படத்தில், சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் ரீச் ஆன “சீதாராமன்” திரைப்படத்தில் பிரின்சஸ் நூர் ஜஹானாக நடித்த மிருணாள் தாகூர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படத்தில் மிருணாள் தாகூர் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இயக்குனர் ஷூர் யுவ் என்பவர் இயக்கும் இப்படத்தை வைர எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் நானி – மிருணாள் தாகூர் இருவருக்குள் எந்த அளவிற்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும் என்பதை படம் வெளியாகும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.