இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பங்களாதேஷ் அணி 227 ரன்களுக்குள் சுருண்டது.
IND vs BAN:
பங்களாதேஷிற்கு எதிராக இந்திய அணி இன்று 2வது டெஸ்ட் போட்டியை மிர்பூரில் உள்ள தேசிய மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியின் கேப்டன், பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவிற்கு பதிலாக, ஜெய்தேவ் உனத்கட் சேர்க்கப்பட்டார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதையடுத்து, பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதில், பங்களாதேஷின் முதல் விக்கெட்டான ஜாகிர் ஹசனை (15), ஜெய்தேவ் உனத்கட் கைப்பற்றி அசத்தினார். இவரை தொடர்ந்து, அஸ்வினின் சுழலில், நஜ்முல் (24), மொமினுல் ஹக் (84) சிக்கி வெளியேறினார். இது போல சீரான இடைவெளியில், பங்களாதேஷ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, 227 ரன்களுக்குள் சுருண்டது.
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000., முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
இந்திய சார்பாக, உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் தலா 4 விக்கெட்டுகளையும், ஜெய்தேவ் உனத்கட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர். இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களான, கே எல் ராகுல் (3*) மற்றும் சுப்மன் கில் (14*) ரன்களுடன் முதல் நாள் முடிவில் களத்தில் உள்ளனர்.