பிரபல நடிகையான ஆலியா மானசா பற்றிய முக்கிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
ஆலியா மானசா
விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர் தான் ஆலியா மனசா. தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவ் அவர்களையே திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கொஞ்ச காலத்திலேயே கர்ப்பமான ஆலியா சீரியலுக்கு கேப் விட்டிருந்தார். அதன் பிறகு தான் ராஜா ராணி 2 சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
எக்கச்சக்கமாக வெயிட் போட்டிருந்த ஆலியா 15 கிலோ வரை எடை குறைதார். ஆனால் இடையிலேயே அவர் கர்ப்பமாக இருந்ததால் சீரியலை விட்டு விலகி விட்டார். இப்பொழுது மீண்டும் பழைய ஃபார்மிற்கு வந்து விட்டார் ஆலியா மானசா. அதாவது, மீண்டும் உடம்பை குறைத்து சன் டிவி சீரியலில் களம் இறங்கியுள்ளார். அதாவது இனியா என்ற சீரியலில் நாயகியாக நடிக்க உள்ளார். இதில் பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் ராஜா ராணி சீரியலில் தனக்கு மாமியாராக நடித்த சிவகாமி தான் இதிலும் அவருக்கு மாமியாராக நடிக்க போகிறார்.
நாளுக்கு நாள் ஆலியா மானசா பிரபலமாகி கொண்டே சென்றாலும் அவருக்குள்ளும் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. அதாவது இதுவரை அவரது குடும்பத்தினர் இதுவரை சரிவர ஏற்றுக்கொள்ளவே இல்லை. அவரது ஒரே தங்கையும் ஆலியாவுடன் பேசுவது கிடையாதாம்.