தமிழகத்தில் இன்று நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு குறித்த ரிப்போர்ட் ஒன்றை, மாநில சீருடை பணியாளர் தேர்வாணையம் அதிரடியாக வெளியிட்டுள்ளது.
முக்கிய ரிப்போர்ட் :
தமிழக அரசின் முக்கிய துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை, மாநில அரசின் தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. அந்த வகையில், இன்று 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், இன்று இந்த தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு எழுத, தமிழகம் முழுவதும் 3,66,727 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால் இவர்களில், 2,99,820 நபர்கள் மட்டுமே இன்று தேர்வு எழுதினர். இவர்களில் 66,907 நபர்கள் தேர்வு எழுதவில்லை. இது குறித்த தகவல்களை தமிழக அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நடந்த குரூப் 1 தேர்வில், 50%க்கும் மேற்பட்ட தேர்வர்கள் பங்கேற்காதது குறிப்பிடத் தக்கது.