தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய நாளை மற்றும் நாளை மறுநாள் 3,723 மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
வாக்காளர் அட்டை
இந்திய குடிமகன் என்பதற்கும், தகுந்த தலைவர்களை தேர்ந்தெடுக்க தேர்தலில் வாக்கு அளிப்பதற்கும் 18 வயது நிரம்பிய ஒவ்வொருவரும் வாக்காளர் அடையாள அட்டை பெற வேண்டியது அவசியம். அதனால் 18 வயது நிரம்பியவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய, ஆதார் அட்டையுடன் இணைக்க சிறப்பு முகாம் கடந்த நவம்பர் 12, 13 ந் தேதிகளில் நடைபெற்றது. இதில் 7 லட்சத்து 10 ஆயிரம் வாக்காளர்கள் பயனடைந்தனர்.
ஆதார் அட்டையின் ஸ்கேனர்களை பரிசோதிக்க உத்தரவு – ஆதார் அமைப்பு எச்சரிக்கை !
தற்போது சென்னையை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான சிறப்பு முகாமில் கலந்து கொள்ள முடியாதவர்கள் இறுதி வாய்ப்பாக நாளை (நவம்பர் 26), மறுதினம் (நவம்பர் 27) 3,723 மையங்களில் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த மையங்களில் 6, 6ஏ, 7 மற்றும் 8 உள்ளிட்ட படிவங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும். மாநகராட்சி கமிஷனருமான சுகன் தீப் சிங் பேட்டியில் கூறியுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
வாக்காளர்களின் இறுதி வாய்ப்பு என்பதால் பல்லாயிரக்கணக்கானோர் பங்குபெற இருக்கும் பட்சத்தில் முன்னெச்சரிக்கையாக காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மையங்களுக்கு செல்லாமல் www.nvsp.in என்ற இணையதளத்தில் சென்று ரிஜிஸ்டர் செய்து படிவத்தை பூர்த்தி செய்யலாம் என தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார்.