சின்னத்திரை நடிகர் தீபக் மற்றும் நடிகை அபி நவ்யாவை குறித்து ஒரு முக்கிய அப்டேட் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.
நடிகர் தீபக் -அபி நவ்யா:
சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்களை கவர்ந்தவர்கள் தான் நடிகர் தீபக் -அபி நவ்யா. தற்போது தீபக் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே பார்ட் 2வில் பிசியாக நடித்து வருகிறார். அதே போல் அபி நவ்யா சன் டிவியில் டெலிகாஸ்ட் ஆகும் கயல் நாடகத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த பிஸியான நேரத்தில் இருவரும் காதலித்து கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்று சோசியல் மீடியாவில் பகிர்ந்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார் தீபக். அதுமட்டுமின்றி சமீபத்தில் அபி நவ்யாவுக்கு வளைகாப்பு படு பிரமாண்டமாக நடத்தினர்.
பிக்பாஸ் ரக்ஷிதாவின் கொழுந்தனை பார்த்து இருக்கீங்களா? இதுவரை நீங்கள் காணாத போட்டோ!!
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வந்தது . இந்நிலையில் நடிகர் தீபக் -அபி நவ்யாயை குறித்து ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது அபி நவ்யா கர்ப்பமாக இருந்த நிலையில், தற்போது ஒரு அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதற்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.